Thursday 5 July 2012

தமிழா! தமிழா!



 தமிழா! தமிழா!
உனக்கும் எனக்கும்-
தாயால் வந்தது யாக்கை;
தமிழால் வந்தது வாழ்க்கை;


எனவே
எஞ்ஞான்றும்...
தாயைத்
தமிழை -
வாழ்த்தப் பழக்கிடு
வாக்கை வழங்கும் நாக்கை;

அகரத் தமிழை ஆயுள் மூச்சாய் -
நுகரச் சொல்லிடு மூக்கை;

அன்னணம்
ஆயின் -
அறவே தவிர்க்கலாம்
அறியாமை என்னும் சீக்கை;

நுண்மான்
நுழைபுலத்தால்-
அடையலாம் நீ
அரிமா நிகர்த்த நோக்கை!

தமிழனே! என்
தோழனே!

அமிழ்தம் அனையது
தமிழ்;  அதில் நீ
அமிழ்; அமிழ்ந்து
இமிழ்;  இமிழ்ந்து
குமிழ்;

ஆங்கிலம்
அளவு-
சோறு போடாது தமிழ் -எனச்
சொல்வோர் முகத்தில் உமிழ்!
                        
 -   வாலி 

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

- வைரமுத்து

No comments:

Post a Comment