ஆசாரக் கோவை எனும் நூல் எப்படி எல்லாம் சாப்பிடக்கூடாது என ஒரு பட்டியல் தருகிறது.
"கிடந்து உண்ணார், நின்று உண்ணார்,
வெள்ளிடையும் உண்ணார்,
சிறந்து மிக உண்ணார், கட்டில்மேல் உண்ணார்,
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!"
கிடந்து உண்ணார் = படுத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது
நின்று உண்ணார் = நின்றுக்கொண்டு சாப்பிடக்கூடாது
வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக்கூடாது
சிறந்து மிக உண்ணார் = நன்றாக இருக்கிறது என்பதற்காக,நிறைய சாப்பிடக்கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கையின்மேல் அமர்ந்து சாப்பிடக் கூடாது
இறந்து = ஒரு, முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)
ஒன்றும் தின்னற்க,நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது
மொத்தத்தில் உட்கார்ந்து, அளவோடு, நேரம் காலம் அறிந்து, சரியான இடத்தில் இருந்து உணவு உண்ண வேண்டும்..

No comments:
Post a Comment