நீதிபதி - வண்டு முருகன் ! உங்கள் கட்சிக்காரரின் குற்றச்சாட்டு என்ன!
கணம் நீதிபதி அவர்களே! என் வீட்டுக்காரர் ஆசையா தோசை சாப்பிட உட்கார்ந்து இருக்கார்! தோசைக்கு தொட்டுக்க என்ன என்று கேட்டு இருக்கார்! என் கட்சிக்காரர்!
அதற்கு அவர் மனைவி சொல்லி இருக்காங்க மூன்று வகையான சட்னி என்று! சொல்லி இருக்காங்க
நீதிபதி - ஒரு தோசைக்கு மூன்று சட்னி நல்லது தானே! இதில் என்ன புகார்!
நோ! யுவர் ஆனர் இங்க தான் அவங்க சூட்சமத்தை நீங்க புரிந்து கொள்ளணும்! அந்த மூன்று சட்னி!
நேற்று அரைத்த சட்னி!
அதற்கு முன்தினம் அரைத்த சட்னி!
அப்புறம் போன வாரம் அரைத்த சட்னி!
கொஞ்சம் என் கட்சிக்காரர் உஷாரா இல்லை என்றால் சட்னி அவர் கிட்னியை காலி செய்து இருக்கும் யுவர் ஆனர்!
No comments:
Post a Comment