இன்று.
பெண்கள் இருவர்.
கல்யாணம் பன்ணனும் பணம் குடுங்க என ஒரு குயர் நோட்டுடன் வநத இரு பெண்கள்.
பாப்பா. ..எங்க பக்கம் ரெண்டு மூனு மாப்பிள்ளை இருக்காங்க..
ஒருத்தர் பேங்குல மேனேஜர்..தங்கமான பையன் என்ன கோசாலை பக்கம் அடிக்கடி போகும்.
இல்லீங்க வேணாம்.கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க ..
இன்னொரு தம்பி அரிசிகடை வைச்சிருக்கு..எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன்.
இல்லீங்க வேணாம்.
கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க
இன்னொரு சாமி ஸ்ரீரங்கமே கதியா கிடக்கும்.
இன்னொரு சார் ஏர்போர்ட்ல வயரிங் வேலை பாக்குறார்..
இல்லீங்க வேணாம்.
கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க
பொட்டு தங்கம் போட வேணாம். கட்டுன புடவை சுடிதாரோடா வந்தாலே போதும் ..என்ன ஒகேவா.?
இல்லீங்க வேணாம்.
கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க ..
கல்யாண செலவு கூட நீங்க பார்த்துக்க வேணாம்..எல்லாம் நம்மளே.
எங்க அம்மாவ விட்டுட்டு வர முடியாதுங்க.
உங்க அம்மாவையும் நல்லா வைச்சிகுவாங்கம்மா.. உனக்கு சம்மதம்னா சொல்லு அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம் முடிச்சிடலாம்..
இல்லீங்க வேணாம்
கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க..
என்னம்மா சொன்னதையே சொல்லிட்டிருக்க..
நீ ஏன் தெரு தெருவா அலையறே ..கல்யாணத்துக்கு தானே காசு கேக்கறே..நாங்க கல்யாணமே பண்ணி வைக்கிறோமே.
வேணாங்க.
ஏம்மா..?
எங்க ஊட்டுகாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு..நான் கிளம்பறேன்.
அடி குந்தாணிகளா...
No comments:
Post a Comment