Thursday, 29 January 2026

உணர்வுசார் நுண்ணறிவு EQ

உணர்வுசார் நுண்ணறிவு பற்றி நண்பர் இன்னொரு பதிலில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

இதை பற்றிய ஒரு ஜென் கதை ஒன்று படித்தேன். இது உணர்வு சார் நுண்ணறிவுக்கான விளக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இரண்டு ஜென் துறவிகள் காடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குறுக்கே ஆறு ஒன்று ஓடி கொண்டு இருந்தது. அதன் அருகில் பெண் நின்று கொண்டிருந்தார்.

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. அதை கடக்க என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்த பொழுது ஜென் துறவிகள் வருவதை பார்த்தார்.

என்னை எப்படியாவது அக்கரையில் விட்டு விடுங்கள் என்று உதவி கேட்டார்.

துறவிகளில் ஒருவர் பெண்ணிற்கு உதவி செய்ய யோசித்த பொது இன்னொரு துறவி அந்த பெண்ணை தூக்கி கொண்டு ஆற்றின் மறுபக்கத்தில் விட்டு விட்டார்.

உடனே அருகில் இருந்த இன்னொரு துறவி நமக்கு சொல்லி கொடுத்த ஆன்மிக பயிற்சியில் பெண்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்று போதித்தார்கள் அல்லவா என்று கோபத்துடன் கேட்டார்.

உடனே அந்த துறவியின் இடத்தில் வேறு யாராவது இருந்தால் கோபமோ அல்லது தப்பு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள் .

ஆனால் அந்த துறவி பொறுமையாக நான் எப்பொழுதோ அவரை மனதில் இருந்து இறக்கி வைத்து விட்டேன். நீங்கள் மட்டும் தான் இன்னும் அதை பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறினார்.

உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலையை கையாள வேண்டும் என்ற அறிவுரையை ஜென் துறவி நமக்கு போதிக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் உதவி என்று கேட்கும் பொழுது மனு தர்மம் படி உதவியும் செய்ய வேண்டும் அதோடு துறவறம் பூண்டவர்கள் பெண்ணை பற்றிய எண்ணம் வளர்க்க கூடாது என்பதற்காக ஆற்றை கடந்த பின் மனதில் இருந்து இறக்கியும் வைத்துவிட்டார்.

கோபத்தையும் வெறுப்பையும் கூட நெடு நாள் மனதில் வைத்து கொள்கிறார்கள். அதையும் மனதில் இருந்து உரிய நேரத்தில் இறக்கி வைத்துவிட்டால் மனம் லேசாகிவிடும்.

No comments:

Post a Comment