"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே"
என்ற வரிகள் தான்.சிறுவயதில் பள்ளியில் இந்த வரியை படித்த நியாபகம்.
ஒளவையார் அருளிச்சென்ற மூதுரை நூட்பாவில் உள்ள இந்த வெண்பாவை முழுமையாக இந்த பதிவில் விளக்க கடமைப்பட்டுள்ளேன்.
வெண்பா:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
பதவுரை:
அட்டாலும் - காய்ச்சினாலும் (அடுதல் - காய்ச்சுதல்)
பால் சுவையில் - பால் தன் சுவையிலிருந்து
குன்றாது - குறையாது
அளவளாய் - மனம் கலந்து
நட்டாலும் - நட்பு செய்தாலும்
நண்பு அல்லார் - அன்பு இல்லாதவர்
நண்பு அல்லர் - நண்பர் ஆகார்
கெட்டாலும் -வறுமை நிலை அடைந்தாலும் (செல்வ நிலை கெட்டாலும்)
மேன்மக்கள் - குணத்தில் உயர்ந்தவர்கள்
மேன்மக்களே - குணத்தில் உயர்ந்த மேன்மக்களாகவே இருப்பர்
சங்கு சுட்டாலும் - சங்கை தீயில் சுட்டாலும்
வெண்மை தரும் - வெண்மை நிறத்தையே கொண்டிருக்கும்.
பொருளுரை:
எவ்வளவு காய்ச்சினாலும் பால் தன் சுவையிலிருந்து குறையாது. சங்கினை எவ்வளவு தீயில் சுட்டாலும் தனது தன்மையான வெண்நிறம் மாறாது. அதுபோல், தன் செல்வ நிலை கெட்டு வறுமை நிலையை அடைந்தாலும் மேன்மை குணம் கொண்ட உயர்ந்தவர்கள், குணத்தில் உயர்ந்த மேன்மக்களாகவே இருப்பர்; எவ்வளவு மனம் கலந்து நட்பு கொண்டாலும் அன்பு இல்லாதவர்கள் நண்பர்களாக மாட்டார்கள்.
No comments:
Post a Comment