Sunday, 12 April 2026

ஊழ்



ஊழ் என்றால் விதி, தலை விதி. நாம் முற்பிறவியில் செய்த கருமத்தின் பலனை (நல்லதோ கெடுதலோ) இந்தப் பிறவியில் தீர்க்கிறோம் என்கிறார்கள்.

குறள் 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.

மு.வரதராசன் விளக்கம்:

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

No comments:

Post a Comment