Friday, 11 September 2026

உண்மையான காதல்.

 

80 வயது தாத்தாவிடம் பேரன் கேட்டான். ...

"தாத்தா... ஒரே பாட்டியை 60 வருடங்களாக எப்படி காதலிக்க முடிந்தது?"

பேரன் எதிர்பார்த்த பதில்...

"புரிதல் வேண்டும்..." "மனம் விட்டு பேச வேண்டும்..." "விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்..."

ஆனால் தாத்தா சிரித்தபடி பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னார்...

"நான் ஒரே பெண்ணை 60 வருடங்கள் காதலித்தேன் என்று யார் சொன்னது?"

பேரன் குழம்பிப் போனான்.

தாத்தா தொடர்ந்தார்...

20 வயதில் அவளின் அழகையும், துறுதுறுப்பையும் காதலித்தேன். அது என் முதல் காதல்.

30 வயதில் அவள் ஒரு தாயாக மாறிவிட்டாள். இரவு தூங்காமல் குழந்தையை தாலாட்டும் அவளை காதலித்தேன். அது என் இரண்டாம் காதல்.

40 வயதில் குடும்பத்தின் சுமைகளை சிரித்தபடி சுமக்கும் துணிச்சலான பெண்ணை காதலித்தேன். அது என் மூன்றாம் காதல்.

50 வயதில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன் ஆசைகளை மறந்துவிட்ட அவளை காதலித்தேன். அது என் நான்காம் காதல்.

60 வயதில் முகத்தில் சுருக்கங்கள் வந்திருந்தாலும், என் மனக்கவலைகளை ஒரு பார்வையில் புரிந்துகொள்ளும் தோழியை காதலித்தேன். அது என் ஐந்தாம் காதல்.

70 வயதில் மருந்து சாப்பிட்டாயா என்று தினமும் கேட்கும் அக்கறையை காதலித்தேன். அது என் ஆறாம் காதல்.

80 வயதில் என்னுடன் மெதுவாக நடந்து, பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் சொல்லி சிரிக்கும் என் உயிர்த்துணையை காதலிக்கிறேன். அது என் ஏழாம் காதல்.

பேரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

தாத்தா இறுதியாக சொன்னார்...

"திருமணம் என்பது ஒரே மனிதருடன் வாழ்வது அல்ல...

காலம் காலமாக மாறிக்கொண்டே இருக்கும் அதே மனிதரின் புதிய புதிய வடிவங்களை மீண்டும் மீண்டும் காதலிக்கக் கற்றுக்கொள்வதுதான் திருமணம்."

அழகு மாறும். வயது மாறும். உடலும் மாறும். சூழ்நிலையும் மாறும்.

ஆனால்...

• ஒவ்வொரு மாற்றத்திலும், "இவள் இன்னும் என் காதலிதான்" என்று சொல்ல முடிந்தால்...

அதுதான் 60 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்.

• காதல் என்பது ஒருமுறை விழுவது அல்ல... வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், அதே மனிதரிடம் மீண்டும் மீண்டும் விழுவதுதான் உண்மையான காதல்.

No comments:

Post a Comment