Friday 27 April 2012

மகான்களுடன் மாலா










மகரிஷிக்கு மாலாவை ரொம்ப பிடிக்கும். " அன்பு மகளே" ன்னு மாலாகிட்ட தன்னுடைய மலரும் நினைவுகளை நிறைய தடவை சொல்லியிருக்கிறார்கள். மாலாவுக்கு ஒரு புடவை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். அன்னை லோகாம்பாளும் மாலாவுக்கு புடவை தந்திருக்கின்றார்கள்.
பன்னிரண்டு வருடத்துக்கு முன் பிரம்மஞானப் பயிற்சிக்கு ஆழியார் சென்றிருந்தேன். மாலா பக்கத்து வீட்டு குழந்தைகளை திருச்சியிலே தன்னுடன் வைத்துக் கொண்டு குழந்தைகளின் பெற்றோர்களைப் பயிற்சிக்கு ஆழியார் அனுப்பியிருந்தாள். மகரிஷி என்னிடம் " ஏன் மாலா வரவில்லை?" என்று கேட்டார்கள்.நான் விஷயத்தை சொன்னவுடன் மகரிஷி சொன்னார்கள் : " இதுதான் உண்மையான பிரம்மஞானம். பிறர் இன்புறக் கண்டு தான் இன்புறுவதே பிரம்மஞான மலர்ச்சி! " என்று கூறி மாலாவை வாழ்த்தினார்கள்.






இதுபோல கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கீழகொட்டையூரில் கடந்த ஐம்பது  ஆண்டுகளுக்கு மேலாக
அனாதைக்  குழந்தைகளுக்கு அதரவு அளித்து, வளர்த்து ஆளாக்கி தற்போது ஆலமரமாக விரிந்து பள்ளிகள் நடத்தி வரும்  95  வயது நிரம்பிய தவத்திரு அண்ணா சுவாமிகளுக்கும் மாலா மேல் மிகவும்  பிரியம். அவருடைய ஆசிகளும் மாலாவின் ஆன்மீகத் தொண்டுகளுக்கு துணை நிற்கின்றன.



 கேரளா கஞ்சன்காட்டிலிருக்கும் ஆனந்தாஸ்ரமத்தின் தற்போதைய தலைவர் சுவாமி முக்தானந்தாவும் மாலாவின் அன்பு அழைப்பை ஏற்று சென்ற ஆண்டு அறிவுத்திருக் கோவிலுக்கு 
வந்திருந்தார்




4 comments:

  1. JP, you forgot to add, even i LOVE "Mala பாட்டி" so much :)

    ReplyDelete
    Replies
    1. Thank you for reminding...

      KG கொ(ஜொ)ள்ளு தாத்தாவுக்காக நிறைய posts காத்திருக்கின்றன..

      Delete
    2. haha JP, deal..deal.....

      hereafter i'll not call Mala loosu ponnu or பாட்டி and promise u, even if photo not good, i'll say SUPER-DUPER :) :)

      Delete
    3. KG கொ(ஜொ)ள்ளு தாத்தா jokes / கதைகளுக்காக இந்த ஞானவயல் வாசகி ஆவலுடன் காத்திருக்கிறேன்... :)

      Delete