Sunday 31 July 2022

காய்கறிகள் பற்றிய வேறு செய்திகள்

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது என கூறுவார்கள். ஆனால் சமைத்து சாப்பிடுவதே அதைவிட சிறந்தது. 


கேரட், உருளைக் கிழங்கு,  வெள்ளரிக்காய் உட்பட அனைத்து காய்கறிகளையும் தோலுடன் சேர்த்துக் கொள்வதே நல்லது. 

பண்டைய எகிப்தில் பிரமிடுகளை கட்டிய தொழிலாளர்களுக்கு கூலியாக முள்ளங்கி, வெங்காயம் மற்றும் பூண்டு வழங்கப்பட்டது. 

1845 - 1852 வருடத்தில் அயர்லாந்தில் பஞ்சம் ஏற்பட்டு ஒரு மில்லியன் மக்கள் இறந்தனர். அந்த பஞ்சம் ஏற்பட உருளைக் கிழங்கு முக்கிய காரணமாக இருந்தது. உருளைக் கிழங்கு சாகுபடியில் ஒருவித நோய் தாக்க அதை மட்டுமே நம்பிய மக்கள் பஞ்சத்தில் சிக்கினர். "உருளைக் கிழங்கு பஞ்சம்" என்றே அது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 

காய்கறிகளிலேயே அறுவடை செய்த செடி உட்பட அனைத்தையும் உண்ணக் கூடியது பீட்ரூட் மட்டும்தான். பீட்ரூட் சாற்றைக் கொண்டு தலைக்கு வண்ணம் பூசிய வண்ணமயமான காலம் இருந்திருக்கிறது. 

உங்களது குரலை பிறர் கவனிக்க வேண்டுமா? பூண்டு மற்றும் வெங்காயத்தின் சொந்தமான லீக்ஸ்ஸை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில், ரோம் மன்னன் நீரோ போன்றவர்கள் அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டனர். 

கத்தரிக்காய் என்றாலே இத்தாலியர்கள் கிலி ஆவார்கள். இத்தாலிய மொழியில் "மெலன்சானா (Melanzana)" என்பதுதான் அதன் பெயர். அதற்கு "பைத்தியக்கார ஆப்பிள் (apple of madness)" என்று பொருள். 

வெண்டைக்காய் விதையை காயவைத்து வறுத்து அரைத்து காபியைப்போல காபிக்கு மாற்றாக குடிக்கலாம். 1863 -ல் அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் காபி தட்டுப்பாடு ஏற்பட, மக்கள் காபியைப் போல வேறொன்றை தேடினர். அதில் வெண்டைக்காய் விதை காபியே சிறந்ததாக இருந்தது. காபியில் இருக்கும் காஃபின் நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தது. 

புடலங்காயின் பழத்தை பார்ப்பது அரிது (விட்டுவைத்தால் தானே!). சதை நிறைந்த முற்றிய புடலங்காயை தெற்கு ஆப்பிரிக்காவில் தக்காளிக்கு பதிலாக புளிப்பிற்காக பயன்படுத்துவார்கள்.

நீண்ட காலமாக அமெரிக்கர்கள் உருளைக் கிழங்கு குதிரைகளுக்கு மட்டுமே ஏற்றது என நம்பி வந்தனர். அதுபோல் பைபிளில் ஒரு வார்த்தைக் கூட உருளைக் கிழங்கு இல்லை,  

வெங்காயமா? முட்டைகோஸா எது பழமையானது என்ற போட்டி உண்டு. போட்டியிடும் நாடு சீனா. அங்குதான் முட்டைகோஸ் அதிக அளவு விளைகிறது. முட்டைகோஸ் மட்டுமல்லாது உலகின் பெரும்பான்மையான காய்கறிகளை விளைவிப்பதில் சீனாதான் என்றுமே முதலிடம். இந்தியாவிற்கு இரண்டாமிடம். 

உருளைக் கிழங்கு, தக்காளி இவற்றை ஆங்கிலத்தில் உச்சரிக்க ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும். உருளைக் கிழங்கு (potato) கிழங்கு வம்சம். தக்காளி (tomato) செர்ரி என்ற பழ வம்சம். இரண்டும் இணைந்தால் எப்படியிருக்கும் என விஞ்ஞானிகள் யோசித்ததுதான் "போமாட்டோ (pomato)". 

தக்காளியில் மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, ஊதா, கருப்பு நிறமெல்லாம் உண்டு, நாம்தான் சிவப்பை மட்டும் பயன்படுத்துகிறோம். 

No comments:

Post a Comment