திடீர்னு ஐம்பதாயிரம் ரூபாய் Gpay ல வந்துச்சி .
புது நம்பரா இருக்கு..
யாரா இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு போன் வந்தது....
தம்பி ஐம்பதாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்ட்ல கிரிடிட் ஆகி இருக்கா என ஒரு பெரியவர் கேட்டார்..
ஆமாங்க
மாத்தி எதுவும் அனுப்பிட்டீங்களா என்று கேட்டேன்..
இல்ல தம்பி
நாங்க எப்பவுமே முதல் மாசம் சம்பளத்தை குலதெய்வ கோவிலுக்கு குடுத்துடுவோம் ..
அதான் என்று சொன்னார் ..
சரிங்க ஐயா
நீங்க எனக்கு எதுக்கு அனுப்புனீங்க உங்க கோயில் பூசாரி நம்பருக்கு அனுப்பி இருக்கலாம் இல்ல என்று சொன்னேன்...
ஐயோ தம்பி எங்க குல தெய்வமே நீங்கதான் என்றார் ....
எனக்கு ஷாக் ஆய்டுச்சி ..
தம்பி எங்களுக்கு ஒரே ஒரு பையன் செல்லமா வளர்த்திட்டோம்..
இன்ஸ்டாகிராம் பேஸ்புக் இதையெல்லாம் பாத்து .. மெண்டல் மாதிரி ஆயிட்டான் 24 மணி நேரம் போனு... கவுன்சிலிங் கூட கூட்டிட்டு போய் பார்த்தோம்!!
எப்ப எது கேட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை!! சந்தோஷம் இல்லை!! என்று புலம்பி கொண்டு இருப்பான்!
சரி ஆகல...
அப்பதான் எனக்கு ஒரு யோசனை எப்படியாவது உங்கள் பதிவுகளை படிக்க வைச்சுடனும்னு ...
சரி என்று உங்க பதிவுகளை அனுப்பி வைத்தேன்...
அதற்கு கை மேல பலன் கிடைத்தது தம்பி .
தொடர்ந்து ஒரு வாரம் உங்க பதிவு படிச்சிட்டு
அன்னைக்கு போன கீழே வைச்சவதான் ...
ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றதையே விட்டுட்டா...
இப்ப வெறும் பட்டன் போன் தான்
தன்னோட படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வேலையும் தேடிட்டான் முதல் மாசம் சம்பளமான 50ஆயிரத்த எங்க கையில கொடுத்தான் .....
அதுதான் அந்தப் பணம் என்று சொன்னார்
எங்க பையனோட வாழ்க்கை என்ன ஆகும்னு கேள்விக்குறியா இருந்த எங்களுக்கு நீங்கதான் குலதெய்வம் என்று குமுறி குமுறி அழுதார்...
ஐயா பெரிய வார்த்தை எதுவும் சொல்லாதீங்க இது என்னோட கடமை..
நாலு பேர் நல்வழிப்படுத்துவதற்காக மட்டும்தான் நான் எழுதிக்கிட்டு இருக்கேன்
மத்தபடி காசுக்காக இல்லை
தயவு செய்து இந்த காசை திருப்பி அனுப்புகிறேன்
அதை ஏதாவது ஒரு ஆசிரமத்திற்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிட்டு ...
பணத்தை திருப்பி அனுப்பி விட்டேன் ..
என்ன பிரண்ட்ஸ் நான் செஞ்சது சரிதானே ..,.
எழுத்துக்கள் விலைமதிப்பற்றது
தயவு செய்து ரூபாய் எனக்கு அனுப்பி ...
என்னை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காதீங்க ப்ளீஷ் ...
No comments:
Post a Comment