Monday 23 October 2023

1000 வருட கல்வெட்டு

 திட்டமிட்டு சேதப்படுத்தபட்டுள்ள 1000 வருட கல்வெட்டு!

பேரரசன் ராஜேந்திர சோழன், தன்னை வளர்த்த சித்திக்கு கட்டிய பள்ளிப்படை கோவில் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ளது. அதில் " ஜெயங்கொண்ட சோழபுரத்து 'பள்ளிபடை' பஞ்சவன் மாதேவி' என்ற வாக்கியத்தில் பள்ளிபடை என வார்த்தை மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு நன்கு படிக்க தெரிந்த ஒருவரால் தான் இது சேதம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் உள்ள இது போன்ற பொக்கிஷங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்! கல்வெட்டு ஆய்வாளர் என வருபவர்களிடம் கவனமாக இருக்கவும்!

பஞ்சவன் மாதேவியின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழுவூர் ஆகும். அதனால் இந்த கோவிலும் பழூவூர் கோவிலை போலவே அமைக்கப்பட்டிருக்கும்.

✍️சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம்

No comments:

Post a Comment