Thursday 6 October 2022

காலமறிதல் - 4

 அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்?


என்கிறது  குறள். ஒரு செயலைச் செய்வதற்கு, தகுந்த கருவியும் தகுந்த காலமும் அறிந்து செய்தால், செய்ய முடியாத செயல் என்று ஒன்று உளதா? என்பதே குறட்கருத்து.

ஒரு செயலைச் செய்வதற்குக் கருவியாக அமைவது, மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும் என்கிறார் தமிழறிஞர் வடிவேலுச் செட்டியார்.

அறிவு, ஆண்மை, பெருமை, ஆகியன மூவகையாற்றல் எனப்படுகின்றன. நால்வகை உபாயம் என்பது சாம, பேத, தான, தண்டம் என்பதாகும்.

இக்கருவியுடன் காலம் அறிந்து செய்தால் எந்த ஒரு செயலும் நிச்சயம் வெற்றி பெறும்.

செயல்களில் சிலவற்றை எல்லாரும் எளிதாகச் செய்துவிட முடியாது.
மருத்துவம் கற்றவனாலும் இறந்தவனைப் பிழைக்க வைக்க முடியாது.
அஸ்திர வித்தை அறிந்தாலும் வானத்தை, பறவை போல் வீழ்த்த முடியாது.
தொடுவானம் என்று பெயர் இருந்தாலும் தொடு வானத்தைத் தொட்டுவிட முடியாது.

இப்படி அரிய செயல்களைக் கூடத் தகுந்த கருவிகளால் செய்தவர்கள் இருக்கிறார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கருவியாக்கிய சாந்தீபினி முனிவர், இறந்து போன தன் மகனை மீட்டுக் கொண்டார்.

கௌரவ, பாண்டவர்களின் உதவியால், துருபதனின் நாட்டை வென்றார் துரோணர்.

 நன்றி - இணைய பதிவு

No comments:

Post a Comment