Thursday 13 October 2022

காலமறிதல் - 6

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்.


ஒருவன் இந்தப் பூமி முழுவதையும் ஆள நினைத்தாலும் அது கைகூடும். ஆனால் தகுந்த காலம் பார்த்து தக்க இடத்தில் செய்ய வேண்டும் என்பது மேற்கண்ட குறட்கருத்து.

இரணியனின் கொடுங்கோலாட்சி நடக்கும் போதும், மகாமுனிவர்களும், ரிஷிகளும், அவனது ஆட்சியைச் சகித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எதற்கும் விடிவு உண்டு என்று பொறுத்துக் கொண்டிருந்தார்கள்.

காலம் மாறும் வரை கைகட்டிக் கொண்டு இருப்பது கோழைத்தனமல்ல. அறிவுடையவர்களும் பொறுத்துக் கொண்டிருப்பார்கள், காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், என்பதையே அது காட்டுகிறது.

No comments:

Post a Comment